Monday, July 28, 2025

Vel Real Estate and Academy ( Best Real Estate company in Ranipet )

 

தரமான மனு எப்படி எழுதுவது ❓
* தவறாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்வது எப்படி?
* UDR பட்டா தவறுகளை திருத்தம் செய்வது எப்படி?
தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 பிரிவு 11-ன் கீழ் மனு.
மனுதாரர்:
பெறுநர்:
வருவாய் வட்டாட்சியர் அவர்கள்,
வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்,
---------------தாலுகா,
--------------மாவட்டம்.
பொருள்: தோராய பட்டாவை மாற்றி நிரந்தர பட்டா வழங்க கூடாது என்று ஆட்சபனை தெரிவித்தல் தொடர்பாக.
பார்வை:
1.UDR க்கு முன் கிரையம் பெற்ற கிரைய ஆவண எண் : --------, நாள்: ------.
2. --------- ஆம் ஆண்டு முதல் ---------- ஆம் ஆண்டு வரை உள்ள வில்லங்க சான்று.
3. தோராய பட்டா எண்:---------, நாள்:---------.
4 . பட்டாவை ரத்து செய்ய கோரி கோட்டாட்சியர் அவர்களுக்கு பட்டா பாஸ் புக் சட்டம் 1983 பிரிவு 12 கீழ் அனுப்பிய மனு நகல்.
5. போலி பத்திரத்தை ரத்து செய்ய பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு அனுப்பிய புகார் மனு நகல்.
மதிப்பிற்குரிய வட்டாட்சியர் அவர்களுக்கு.
1. நான் தினக்கூலி செய்து சுயசம்பாத்தியத்தில் நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு (UDR) முன்பே என் வாரிசுகளுக்காக பார்வை 1 ல் கண்டவாறு " அ " பதிவேட்டிற்கு முன்பு 1958 ஆம் ஆண்டு அசல் கிரையம் பெற்றேன்.
2. மேற்படி இடத்தின் உரிமையாளரை காட்டும் வகையில் பார்வை 2- இல் கண்டவாறு 1958 ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை வில்லங்க சான்று எனது பெயரில் தான் உள்ளது.
3. ஆனால் பார்வை 3 ல் கண்டவாறு --------------- வட்டாட்சியர் சொத்தில் சட்டப் பூர்வ உரிமையில்லாத வேறு நபருக்கு தோராய பட்டா (எண்:-----) வழங்கி இருக்கிறார்.
4. மேலும் தோராய பட்டாவை ரத்து செய்ய வேண்டி பார்வை 4 ல் கண்டவாறு கடந்த ------------------ஆம் தேதி பட்டா பாஸ் புக் சட்டத்தின் கீழ் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு மனு அளித்துள்ளேன்.
5. மேலும் பட்டாவை வைத்து பத்திரம் பதிவு செய்ய கூடாது என்றும், பட்டாவை வைத்து யாரும் நிலத்தின் உரிமை கோர முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் தோராய பட்டாவை வைத்து பார்வை 5 இல் கண்டவாறு பதிவு செய்யத பத்திரத்தை ரத்து செய்ய வேண்டி பதிவு துறை தலைவர் அவர்களுக்கு மனு அளித்துள்ளேன்.
ஆட்சபனைக்கான காரணங்கள்
1. சொத்தின் உரிமையாளர் என்ற வகையில் என்னிடம் எந்த வகையான விளக்கம் கேட்காமலும், எந்தவிதமான அறிவிப்பு வழங்காமலும் வேறு நபருக்கு தோராய பட்டா வழங்கியிருப்பது சட்டப்படி குற்றமாகும், மேலும் இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950 பிரிவு 14 மற்றும் 21 இன் படி அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகும்.
2. இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950 பிரிவு 14 & 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி பட்டா வழங்குவதற்கு முன் நிலத்தின் உரிமையாளராகிய எனக்கு நீதிக்குட்பட்டு அறிவிப்பு கொடுக்காமலும், வாய்ப்பு அளிக்காமலும் என் தரப்பு வாதத்தை கேட்காமலும் பட்டா வழங்கியிருப்பது சட்டப்படி குற்றமாகும்.
3. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 பிரிவு 375 ன்படி அரசு பணியாளரின் இத்தகைய செயலானது இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரான செயலாகும்.
4. மேலும் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் நிலை ஆணை எண் 31 மற்றும் கிராம நிர்வாக நடைமுறையை விதியை பின்பற்றாமல் பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி குற்றமாகும்.
5. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
6. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 3(7) ன்படி நிலத்தில் அக்கறை கொண்டுள்ள எனக்கு முறையீடு செய்ய போதிய வாய்ப்பு வழங்காகது மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1994 இன் படி மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைக்கு எதிராக செயலாகும்.
7. தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 3 (1) ன் படி சம்பந்தப்பட்ட கிராமத்தில் பட்டா வழங்குவது குறித்து அறிவிப்பு மற்றும் படிவம் – 1 வழங்கப்படவில்லை.
8. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 7 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் பட்டா வழங்கியிருப்பது இயற்கை நீதிக்கு எதிரான மற்றும் சட்ட விரோதமாகன செயலாகும்.
*எனவே கனம் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் மேற்படி மனு மீது உரிய விசாரணை செய்து சட்டத்திற்கு புறம்பாக வழங்கிய தோராய பட்டாவை ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டியும், தோராய பட்டாவை மாற்றி நிரந்தர பட்டா வழங்க கூடாது என்று தங்கள் முன்னிலையில் இந்த மனுவை சமர்ப்பிக்கிறேன்.
நாள்:
இடம்:
இப்படிக்கு
மனுதாரர்
ப.ஏழுமலை
வேல் ரியல் எஸ்டேட் & அகாடமி
செல் : 8248673040

No comments:

Post a Comment